ஒரு துறையில் ஒரே ஒருவரைத்தான் பிடிக்கும்/பிடிக்காது என்று தேர்வு செய்ய முடியவில்லை, என்வே தொடரின் விதியை மீறி சிலவற்றில் இரண்டு மூன்று என உண்டு.
1) எழுத்தாளர்கள்
பிடித்தவர் - ஜெயகாந்தன். விளிம்பு நிலை மனிதர்களைக் கண்டவுடன் எனக்கு எழுந்த வெறுப்பை கருணையாக மாற்றியது சிங்கத்தின் எழுத்துக்கள்தான். பள்ளி இறுதி மட்டும் கல்லூரி நாட்களிலேயே தீவிரமாக வாசித்திருந்தால் ஒருவேளை என் வாழ்வு தடம் மாறியிருக்கும். ஆனால் அரசியல்வாதிகளின் மீதான வெறுப்பையும் தாண்டி இன்னமும் கொஞ்சமாவது சமூக அக்கறை உள்ளத்தில் இருக்கிறதென்றால் அதற்கு முழுக்காரணம் அவர்தான்.
பிடிக்காதவர் - ஜெயமோகன். என்ன காரணமென்று தெரியவில்லை, ஜெமோவின் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு. கல்லூரி நாட்களில் வாங்கிய 'சங்க சித்திரங்கள்'தான் நான் வாசித்த அவரின் ஒரே புத்தகம் ஆனால் பல முறை முயன்றும் சில பக்கங்களுக்கு மேல் புரட்ட முடியாமல் அப்படியே அட்டாலியில் வீசி விட்டேன். விஷ்ணுபுரத்தை பலரும் சிலாகித்தாலும் மீண்டும் ஒருமுறை அவரை வாசிக்க நேரமும் பொறுமையும் இல்லை.
2) நடிகர்கள்
பிடித்தவர் - அஜீத்குமார். இவர் என்ன நடிக்கிறார் என்று கேட்காதீர்கள், நிஜ வாழ்விலும் நடிக்கத் தெரியாதவர். இவரின் உதவியால் மேலே வந்த இயக்குனர்கள், வெளியே தெரியாமல் செய்யும் பல உதவிகள் என அவரின் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இவ்வளவு தோல்விப்படங்கள் கொடுத்த எந்த நடிகரும் இவர்போல் திரையுலகில் நிலைத்ததில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் துவளாத இவரின் தன்னம்பிக்கை பல நேரங்களில் எனக்கு உற்சாக டானிக்.
பிடிக்காதவர்கள் - காதல் படத்தில் விருச்சிககாந்த் திரைப்பட வாய்ப்பு கேட்கும்போது சொல்வார், "இல்ல சார், மொதல்ல ஹீரோ, அப்புறம் கொஞ்சம் அரசியல், அப்புறம் சி.எம், அப்புறம் டெல்லி". இதேபோல் இன்று நடிக்க ஆரம்பிக்கும் முன்னரே கோட்டைக்கு ஆசைப்படும் தமிழ் சினிமாவின் தளபதிகள் எவரையும் பிடிக்காது.
3) மாவட்ட ஆட்சியர்
பிடித்தவர் - ககன்தீப்சிங் பேடி. "இந்த மாநிலத்தில் பணியில் இணைந்தபோதே நானும் தமிழனாகி விட்டேன்" என்றவர். சுனாமியின் போது கடலூர் மாவட்டத்தில் இவர் ஆற்றிய பணியை யாராலும் மறக்க முடியாது என நினைக்கிறேன். ராதாகிருஷ்ணனையும் பிடிக்கும் என்றாலும் மீடியா வெளிச்சம் எப்போதும் அவர் மீதே இருந்தது. இதே போல் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு, சுப்ரியா சாஹூ(முன்னாள் உதகை ஆட்சியர், தற்போது செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குனர் - டெல்லி) ஆகியோரையும் பிடிக்கும்.
பிடிக்காதவர் - கலைவாணன். ஒரு காலத்தில் எங்கள் கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தார். பல ஊழல் வழக்குகளில் சிக்கி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
4) காவல்துறை அதிகாரி
பிடித்தவர் - சைலேந்திர பாபு. எண்பதுகளின் இறுதியில் வட மாவட்ட கலவரங்களின் போதும், வட சென்னை ஆணையராக இருந்த போதும் இவர் ஆற்றிய சேவைகளை அந்த துறை நண்பர்கள் கூறிய போது வியந்தேன். அதேபோல் அந்தப் பகுதி மக்களும் அவரை மறக்க மாட்டர்கள் என எண்ணுகிறேன். ஆட்சி மாற்றத்தால் தற்போது புகளூர் காகித ஆலை புலனாய்வுத்துறை ஐஜியாக டம்மியாக்கப் பட்டுவிட்டாலும் பல சிவில் சர்வீஸ் மாணவர்களின் ரோல் மாடல் இவர்தான். இவரல்லாமல் விஜயகுமார், ஜாங்கிட், மற்றும் நேர்மையான அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளையும் பிடிக்கும்
பிடிக்காதவர் - வால்டர் தேவாரம்.
5) கல்வித் தந்தைகள்
பிடித்தவர்கள் - பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மற்றும் பூ.சா. கோவிந்தசாமி நாயுடு அவர்களின் PSG குழுமம். பொறியியல் கல்வி என்றாலே கோவை மாவட்டம்தான் என்று பெயரெடுக்க இந்த இரு பெரியவர்கள்தான் காரணம். வெறும் கல்லூரிகளை மட்டும் திறக்காமல் ஒருங்கிணைந்த தொழிற்சாலைகளையும் நிறுவி வேலைவாய்ப்பையும் பெருக்கிய இந்த இரு பெரும் குழுமங்களால்தான் பல தடைகளையும் தாண்டி கோவை மாவட்டம் இன்னும் தாக்குப் பிடிக்கிறது.
பிடிக்காதவர்கள் - கல்வியை வியாபாரமாக்கிய ஜேப்பியார், எஸ் ஆர் எம் குழுமத்தின் பச்சமுத்து மற்றும் காளான்களாய் முளைத்துள்ள பல பொறியியல் கல்வித் தந்தைகளும்.
6) விஞ்ஞானிகள்
பிடித்தவர்கள் - முன்னாள் இந்திய அணுசக்தி கழகத் தலைவர், பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்த டாக்டர் ஆர். சிதம்பரம் மற்றும் தற்போதைய ப்ரம்மோஸ் செயல் திட்ட இயக்குனர் திரு. சிவதாணுப் பிள்ளை. அப்துல்கலாமுடன் இணைந்து தமிழரின் பெருமையை உலகறியச் செய்ததில் இந்த இருவருக்கும் பெரும் பங்கு உண்டு.
பிடிக்காதவர் - மயில்சாமி அண்ணாதுரை. எங்கள் ஊர்காரர்தான் என்றாலும் சற்றே மீடியா மோகம் பிடித்தவர் என்று தோன்றுகிறது.
7) அரசியல் தலைவர்கள்
பிடித்தவர்கள் - நெடுமாறன் ஐயா உள்பட ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் எல்லா தலைவர்களையும் மதிக்கிறேன. சம காலத்தில் அரசியலில் இறங்கியவர்கள் அனைவரும் பெரிய அளவில் செட்டிலாகிவிட இன்னமும் பொதுவாழ்வில் எளிமையை கடைபிடிக்கும் அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களையும் பிடிக்கும்.
பிடிக்காதவர்கள் - ஜெயலலிதா, ராமதாஸ்.
8) ஆன்மீகத் தலைவர்கள்
பொதுவாகவே இந்தக் கூட்டத்தை எனக்குப் பிடிக்காது. ஆனால் அவ்வப்போது செய்யும் பொதுத் தொண்டுகளால் மனதைக் கவர்ந்த தமிழர் Art of Living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மறைந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பிடிக்காதவர்கள் - பெரிய லிஸ்டே உண்டு, குறிப்பாக கல்கி சாமியார் மற்றும் மேல்மருவத்தூர்காரர்.
9) பத்திரிகையாளர்கள்
பிடித்தவர்கள் - நக்கீரன் ராஜகோபால், மாலன் மற்றும் பா. ராகவன்.
பிடிக்காதவர்கள் - ஹிந்து ராம் மற்றும் அந்துமணி. இவர்கள் இருவரையும் சில வருடங்கள் முன்பு வரை மிகவும் மதித்தேன். ஆனால் கடந்த காலங்களில் இவர்களின் மற்றொரு முகம் வெளியே தெரிய ஆரம்பித்தபோது உடைந்து போனேன். ஹூம், அறிவாளிகள் எல்லோருக்கும் மனிதாபிமானமும் இருக்கும் என்று எண்ணியது எவ்வளவு முட்டாள்தனம்.
10) ஊர் / மனிதர்கள்
பிடித்தது - உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கொங்கு நாட்டின் அனைத்து ஊர்களும். பசுமை நிறைந்த எங்கள் ஏரியா என்பதால் மட்டுமல்ல, கடும் உழைப்பாளிகளும், சக மனிதனை மதிக்கும் பண்பு நிறைந்தவர்களும் நிறையப் பேர் இருப்பதால்.
பிடிக்காதது - சென்னை. காரணம் மேலே சொன்னதுதான். அறிமுகமில்லாதவர்களை, வயதானவர்களைக் கூட ஒருமையில் அழைக்கும் பண்பு. ஒவ்வொரு வார்த்தைக்கும் 'ங்க' போட்டலும் பதில் 'இன்னா?' என்றுதான் பெரும்பாலும் வரும். தற்போது எங்கள் திருப்பூரும் சென்னைபோல் மாறிவருகிறது என கேட்கும் போது வேதனையாய் இருக்கிறது.
எனக்குத் தெரிந்த அனைத்துப் பதிவர்களையும் வேறு பலர் அழைத்து விட்டதால் நண்பர் ஜோ ஆனந்த் மற்றும் ஆரூரன் விசுவநாதன் ஆகிய இருவரை மட்டும் தொடர அழைக்கிறேன், ஏற்பார்கள என்ற நம்பிக்கையில்.
அவசியம் ஏற்பட்டால் ஒழிய இன்னும் சில தினங்களுக்கு பதிவெழுதும் உத்தேசமில்லை. அடுத்த வாரம் ஜோர்டான் பயணம் அதற்கடுத்த வாரம் இந்தியா என தொடர்ந்து எஞ்சியுள்ள பணிகள் மலைபோல் கண்முன் நிற்கின்றன, பார்ப்போம்.
புடிச்சிருக்கு சிலது... :-)
ReplyDeleteபுடிக்கலை சிலது.... :-(
நட்சத்திரம் கடமையை முடித்ததுக்கு வாழ்த்துக்கள் மச்சி!!
நல்ல தேர்வு.. அழகான விளக்கம். சென்னையைப் பற்றிக் கூறியதை ரசித்தேன். என் கருத்தும் அதே!!
ReplyDeleteஆய்ந்து எழுதப்பட்ட இடுகை...
ReplyDeleteராதாகிருஷ்ணன் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக அற்புதமான அதிகாரி...
கும்பகோணம் தீ விபத்து மற்றும் சுனாமி காலத்தில் இவரின் பணி மறக்கவே மறக்க முடியாத ஒன்று
ஜாங்கிட் விஜயகுமாரெல்லாம் நேர்மையான அதிகாரிகள்னு யாரு சார் சொன்னது.
ReplyDelete:-)
ReplyDeleteநல்லா எழுதியிருக்கே நாகா
:-) வித்தியாசமா இருந்தது...தெரிபுகளும் விவரித்த விதமும்!
ReplyDelete//சவுக்கு said...
ReplyDeleteஜாங்கிட் விஜயகுமாரெல்லாம் நேர்மையான அதிகாரிகள்னு யாரு சார் சொன்னது//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. நான் அறிந்தவரையில் இருவரும் கொடுத்த வேலையை செவ்வனே செய்வதில் வல்லவர்கள். பல காவல்துறை நண்பர்களுக்கு இவர்கள் ரோல் மாடல். எனவே இருவரையும் பிடிக்கும். இவர்கள் இருவரும் நேர்மையானவர்களா எனத் தெரியாது, ஆனால் நேர்மையான காவல் அதிகாரிகள் அனைவரையும் பிடிக்கும் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளேன்.
நான் எதிர்ப்பார்த்த தெளிவான பதில்
ReplyDeleteஏன் பிடிக்கும்/பிடிக்காது என்று
வாழ்த்துக்கள்
ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க நாகா. மிக அருமை. அனைத்துமே ஓகே. பிடிக்காத அரசியல் தலைவரில் மட்டும் ஒருவரை விட்டு விட்டீர்கள்...
ReplyDeleteபிரபாகர்.
பிடித்தவர்கள் - நக்கீரன் ராஜகோபால், மாலன் மற்றும் பா. ராகவன்.
ReplyDeleteபிடிக்காதவர்கள் - ஹிந்து ராம் மற்றும் அந்துமணி.
ரெண்டு குரூப்புக்கும் என்ன வித்தியாசங்க?
மொதல் குருப்போட மற்றொரு முகம் இன்னும் ஒங்களுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கல்லன்னு நெனைக்குறேன். ஹூம், இவங்களுக்குமட்டும் மனிதாபிமானமும் இருக்குன்னு நெனைக்கறதும் முட்டாள்தனம். ஈழத்தமிழருங்கள எழுத்தால கொன்னதுல இவுங்கமட்டும் இந்து ராமுக்கு கொறஞ்சவுங்க இல்லீங்க.
தெளிவான காரணங்களுக்காக உங்கள் இடுகை: பிடித்தது
ReplyDeleteதேவை ஏற்பட்டாலே ஒழிய இடுகையில்லை என்ற செய்தி தாங்கியதால்: பிடிக்காதது.:))
உண்மையின் ராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த எளிமையான ஆட்சியர். எங்கள் நாகைமாவட்ட ஆட்சியராக இருந்தபோதுதான் அவரது பணிகளை கண்டிருக்கிறேன். தங்களுக்கும் பிடித்ததில் ஆச்சரியமில்லை.
ReplyDeleteநல்ல இடுகை....
அருமை நண்பர் நாகா ரொம்ப ரசித்தேன்,
ReplyDeleteஎன்ன தீர்க்கமான பதில்கள்?,அருமை ஜோதிஜி எங்கேஇருந்தாலும் மேடைக்கு வரவும்.
ரொம்ப பிரியப்ப்ட்டாருங்க.உங்க பதில்களை படிக்க,
சுந்தர் சாரின் பதில்களயும் படிக்க ஆவலாக இருப்பதாக
பின்னூட்டியிருந்தார்.
ஓட்டுக்கள் போட்டாச்சு.
பதிவெழுத வந்த கதையை எழுது என்று ஒரு முகமறியாத பதிவுலகத் தங்கையின் வேண்டுகோள் ஏற்கனவே முதலில் நிற்கிறது.
ReplyDeleteஇன்னும் இரண்டு வாரங்களுக்குள் எழுத முயல்கிறேன்.
அருமை நாகா. தொடர் பதிவில் சற்றே வித்தியாசமாக இருந்தது இந்த பதிவு
ReplyDeleteநல்லா இருக்கு தல..
ReplyDeleteஅட அஜித் பற்றி நான் எழுதி இருந்தால் கூட இதேப்போல் தான் எழுதி இருப்பேன்..
என்னடோய தன்னம்பிக்கையை தூண்டும் மனிதர்..முக்கியமாக நான் துவளும் வேளைகளில்..
ககன்தீப்சிங் பேடி..
அற்புதமான மனிதர்..மிக எளியவர்..பண்பு உள்ளவர்..சுனாமி நேரத்தில் மட்டும் அல்ல மற்ற எல்லா துயர் நேரங்களிலும் மக்களோடு மக்கள் தோள் கொடுப்பவர்..
அவர் பணிவிடை பெற்ற சமயம் கடலூர் மாவட்ட மக்கள் அனைவருமே தங்கள் வீடு பிள்ளை தங்களை விட்டு விடை பெறுவதுப்போல் வருத்தப்பட்டனர்..
இன்னும் அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்..
வருகைக்கு நன்றி கலை, செந்தில், சென்ஷி, கதிர்,சந்தனமுல்லை, சவுக்கு,அபு, பிரபாகர், கனகா( இவங்களோட எழுத்து ஆளுமையும் தைரியமும் எனக்குப் புடிக்கும்) வானம்பாடிகள் ஐயா, பாலாசி, கார்த்திகேயன், ஜோ, ஆதவன், வினோத்
ReplyDeleteஅருமையான தேர்வு நாகா.......
ReplyDeleteஅழைப்பிற்கு நன்றி......
முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.
மேடைக்கு வந்தாச்சு அறிவுத்தேடல்.
ReplyDeleteஇதுக்கு எல்லாம் மைக் வச்சு கத்தனுமாக்கும். ரொம்ப நாளைக்கு பெறவு அத்த மகளோட சந்தைக்கு வந்துருக்ற போது சங்கடத்த உருவாக்கிட்டீயேளேப்பு.
நாகா பிடிக்கலை பிடித்ததுன்னு பொதுவா எழுதி இருந்தாலும் இவரைப்பற்றி , இவருடன் பேசி முடித்ததும் நான் எப்போதும் நினைத்துக்கொள்வது, டீம் லீடர் பதவி எந்த புண்ணியவான் கொடுத்தானோ, ஐயாமாரே ரெண்டு நாளைக்கு உங்க வேளைய நிப்பாட்டச் சொல்லிவிட்டு ரூம்க்குள்ள போட்டு சாத்தி இடுகைக்கு தேவையான எல்லாத்தையும் (இது மாதிரி சிந்திக்கக்கூடியதை) எழுதி கொடுத்தா தான் வீட்டுக்கு போய் அம்மா பாக்க விடுவேன்னு சொன்னா எப்படி இருக்கும்ன்னு கற்பனை செய்து பார்ப்பேன்.
காரணம் நாகா சிந்தனைகள் வெறுப்புக்கும் விருப்புக்கும் அக்கறைக்கும் ஆற்றாமைக்கும் இடைஇடையே உழன்று கொண்டு உழைத்துக்கொண்டே இருப்பது.
ஏதோ ஒரு இடுகையில் விதைபோல் பின் ஊட்டத்தில் மற்றவர்களை முளைத்து வெளியே வர காரணமாக இருந்து கொண்டே இருக்கிறார்.
அவரே அடிக்கடி சொல்லும் பதிவர்களின் நட்பு என்பது பதியம் போடாத செடி என்பதாக இருந்தாலும் கூட.
என்ன செய்வது இவருடை இந்த இடுகைக்கு பாராட்ட வேண்டும் என்றால் செந்திலுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். ஓட்டு மூலம் நகர்த்தியாச்சு. வித்யாசமான சிந்தனைகளை நல்லவுங்க தெரிய வேண்டாமா?
நாகாவுக்கு விருப்பம் இல்லாத (சோறு போடுமா?) எழுத்தைப் போல நீண்ட நாளைக்குப் பிறகு தான் மின் அஞ்சல் மூலமாக இந்த இடுகை மட்டும் வந்தது.
செந்தில், நாகா, கார்த்திக் மூன்றும் கலந்த காக்டெயில். எந்த சிந்தனையும் மாற்றம் இல்லை. உருமாற்றம் அடைய உதவியர்களின் அறிமுகம். அற்புதம்.
சுந்தர் பெரிய விசயமே அல்ல. உள்ளே இருப்பது உருவகம் ஆகி விட்டால் கொப்பளித்து விடும். கொப்பும் குலையும் பார்க்க ஆவலாய் சுந்தர்.
அலோ அலோ அலோ........................
அழகாக சொல்லியிருக்கீங்க..
ReplyDeleteசார் கோயம்புத்தூருல தான் எவனுமே மரியாதையாக பேசுறதே இல்ல .அவன் சாதிக்காரன மட்டும் தான் மரியாதையாக பேசுவானாமா . ஆனா ஊருக்குள்ள கொங்கு மண்டலம் தான் மரியாதையானதுன்னு சொல்லறீங்க . சுத்தமாக இங்கீதமே இல்லாம என்ன நீ , நீ போ வானு ஒருமையில் பேசுறது சத்தியமா கொங்கு மண்ணின் மைந்தர்கள் நு சொல்லீட்டுத் திரியுறதுக தான் . வெளியூர்ல இருந்து இங்க வர்ரவன் கூட மரியாதையா பேசுறான் . ஆனா இங்க இருக்கிறவனுக்கு என்னமோ கொங்கு கொங்கு நு பைத்தியம் பிடிச்சுப்போச்சு . உண்மையா உழைக்கிற தென் மாநில மக்கள கொஞ்சம் கூட மரியாதை இல்லாம திருப்பூர்ல இருக்கிற ஓனர் நாய்கள் வா போ என்று ஒருமையில் தான் கூப்புடுரானுக.இப்ப தமிழ் மக்களுக்கு கூட வேலை தருவதில்லை இந்த பேராசை பிடித்த நாய்கள் . ஹிந்திக்காரனுக்கு மட்டும் தான் கொங்கு மண்டலம் முழுதும் வேலை . சக மனுசனை மனிதனாக மதிக்கத் தெரியாமல் இன்னும் நாகரிகமாக கூட பேச தெரியாம வா போ நு பேசுறது தப்பில்லை ங்கிற முடிவுக்கு வந்துட்ட காசு இருக்கிற திமிரோ .....
ReplyDelete