
நினைவுகளால்
தனித்து
விடப்பட்டதென்
கனவு
தொலைந்த இரவுகளில்
துணையின்றித்
தேடிய
விடியலும்
அலைந்து திரிந்த
கால்களை
அணைத்துக்
கிழித்த முட்களும்
விரிந்த சிறகுகளை
முடக்கிய
வீட்டுக்
கூரையும்
உடைந்த அகத்தின்
உவகை
முகமும்
கலைந்த கூந்தலாய்
கருகிய
கால வெளியில்
கடை விரித்துக்
காத்திருக்கிறேன்
கனவுகள் -
விற்பனைக்கு
விடை இல்லை
விலைமகளா
நான் என்றால்...?